Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Wednesday, July 22, 2020

                       Dancing of birds.. --------1




அடர்ந்து பெய்து கொண்டிருந்தது மழை..ஓசூர் அப்படித்தான்,மழை வரம் பெற்ற ஊர்...ரொம்பவும் மனசுக்கு பிடிச்ச ஊர்..எட்டி பிடிச்ச மாதிரி விவசாய நிலங்களும் கிராமங்களும் இருக்கிற ஊர்..மத்திகிரி தேன்கனிக்கோட்டை கும்ளாபுரம், தளி ன்னு சிறிய கிராமங்கள் இருக்கிற அழகான சூழல் அமைந்த ஊர்..ஜன்னல்  வழி மழை சுகம்..சற்றே முன்பு இரண்டு அணில்கள் கொஞ்சி விளையாடிட்டு இருந்தது, ஒன்ன ஒன்னு பிடிச்சு தள்றதும் என்னமோ பேசிக்கிறதும்,,, ஆ ரொம்ப நேரம் பார்த்திட்டு இருந்தேன்.. அப்பதான் மழை வந்தது...

நிறைய பறவைகளை இங்க பார்க்கமுடியும்  கொஞ்சநாள் முன்னாடி dancing of Birds அப்டின்னு ஒரு BBC documentary பார்த்தேன், அப்படி ஒரு அழகு ஓவ்வொரு பறவையும் வேற வேற வண்ணங்கள்ல , தீட்டப்பட்ட ஓவியங்கள் மாதிரி ...ஒவ்வொரு பறவையும் தனக்கான இணைக்காக அவ்வளவு மெனக்கெடுது, ஒரு பறவை தன்னோட இடத்தை  பூ வச்சு அழகா ஆக்குது..இன்னொரு பறவை தன் இடத்தில விழுந்த அத்தனை மரத்தின் இலைகளை சுத்தமா கூட்டி எடுத்த மாதிரி clean பண்ணிட்டு பத்து டான்ஸ் move ments  பண்ணி காமிக்குது தன் இணையை கவர்வதற்கு ,ஒன்னு விதம் விதமா பாட்டு பாடுது... ஒன்னு மிக நேர்த்தியா வீடு அதற்கான இருப்பிடத்தை கட்டுது ,  அதுங்க அத்தனையும் இயற்கை விதியை உணர்ந்து  வாழப்பழகிய உயிர்கள்..இன்னமும் நமக்கான இணையை யார் யாரிடமோ கேட்பவர்களாக அம்மாவும் ஆட்டுக்குட்டிகளும் நிர்ணயம் செய்யும் மனிதர்களாக இருக்கிறோம்.. இன்னமும் பணத்தை மதிப்பீடுகளை பார்த்து மனங்களை தொலைப்பவர்களாகிறோம்..

ஏன் நம்மிடம் மனம் என்பது கண்டுகொள்ளப்படா ஒன்றாகி விடுகிறது.. தாகூரின் ஒரு சிறுகதை சுபா என்ற ஊமை பெண்பற்றிய கதை அது..அவளின் எண்ணங்களையும் விருப்பங்களையும்  எவரும் கேட்கவும் மாட்டார்கள்.. அவளால் எதையும் கூறவும் முடியாது.. அவளது ஆசைகள் கண்ணீருடன் முடங்கிப்போகும்...ஆணாகட்டும் பெண்ணாகட்டும் கணக்கீடுகளின் அளவீடுகளுக்குள் எவ்விதம் வாழ்வை பொருத்தி பார்க்க முடிகிறது..

இப்படியான பார்வைகள் தான் இப்போதிருக்கும் இந்த நிலைதான் வாழ்வை சிதைத்துள்ளது...லச்சக்கணக்கில் LKG யில் கட்டிய  பணம்  addmission போட்ட பாவத்திற் க்கு bus fees குழந்தை இன்னும் பள்ளி செல்லவே இல்லை.. ஆனாலும் பெருமைகள் இன்னமும் விரிந்து கொண்டுதான் உள்ளது... உறவுகளில் மனிதன்  போடும் கணக்குகள் அதி நஷ்டமாய் அவனிடமே சேர்கின்றன என்பதை மனம் உணர்தலன்றி ஒருவர் அதை அறிய வாய்ப்பில்லை...

இப்பிறப்பில் வாழ்வை கடப்பதெனின் ஏதாவது ஒன்றை கட்டிக்கொள்ளுங்கள், வாழ்வை வாழ்ந்து பார்க்கவேண்டுமெனில் மனதினை உற்று நோக்குங்கள் அதனின் குரல் கேளுங்கள் வாழ்வு மலர்வதற்கு ...








No comments:

Post a Comment