Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Tuesday, February 10, 2026

Something Interesting

I came through some questions.

.they are here

 1.

If someone told you,

you are a lot like your partner would this be a complement to you??     

Or you Truly fulfilled or just less lonely or you able to be unapologetically yourself or 

do you feel the need to show up differently to please your partner or 

are you in love with who your partner is right now as a whole or you only love with their good side or the potential or the idea of them or

 would you want your future or an imagined child to date someone like your partner.. ...

MY ANSWERS

 1)) I am who I am. I wouldn’t take being told I’m like my partner as a compliment, because every soul is unique and so am I...

 2))

In any relationship, I don’t think one can feel complete fulfillment...at best, it may ease the sense of loneliness.

I may not be able to remain exactly as I am, out of love, we change a little, and that’s okay.

All is fair in love and war...so, we grow, we adjust, and we keep going...

3)))

When we enter a relationship, we should step in with genuine love for the person as a whole that itself is a form of respect for the relationship. 

4))

A human being is always a mix of both light and shadow..there’s nothing that exists as only good or only bad.

If we look only at someone’s talent or potential, that isn’t really a relationship  that’s more like searching for a person for work.

 We may feel attracted to an idea or a fantasy, but we can’t truly love a mere imagination..

if it's love then it is real...

5))

I would want her to choose someone she truly likes ...

someone who loves her with all her strengths and flaws...

Why should she choose someone similar to the person I loved?..

There is no ..like” or ..similar” here...

She is simply a child who came through me ..that’s all. She and I are different individuals. I would never expect her to love what I or whom I loved...the choice is entirely hers....

Thursday, January 29, 2026

Vysag- Travel - Day 2 nd 3

 Treebo imperia ஒரு நாள் தான் book பண்ணிருந்தேன் .. தொடர்வதற்கு பார்த்தால் , நான் book செய்த rate.. க்கு கிடைக்கவில்லை ..chat Gpt, கிட்ட கலந்து கிட்டு ..book செய்தது தான், kinnerra comforts, City பக்கம் .. morning complementary breakfast முடிச்சிட்டு  கிளம்பினேன்... breakfast ரொம்ப நல்லா இருந்துச்சு ..full கட்டு கட்டி விட்டு புறப்பட்டேன்.. எதுக்கெடுத்தாலும் cab or auto , வேண்டாம்  bike ல போவோம்னு .. driving person phone பேச .. நான் சொல்ல.. எப்படியோ .. உயிரோடு kinnerra comforts வந்தேன்..

Foot massager இருந்தது, local cable TV , chiranjeevi Sridevi படம் பார்த்தேன்... அன்று கிளம்பி நான் சென்ற இடம், ..simhachala temple, மலை மேல, நல்லா இருந்தது.. முடித்து விட்டு RK beach வந்தேன், beach ஜக ஜோதியா .. இருந்தது .. நல்ல mixed chat and coffee குடித்து விட்டு, காளி கோயில் போனேன்... சுற்றி விட்டு இரவு 9.00 மணிக்கு room வந்தேன்..





மூன்றாம் நாள் மாலை return ticket, போட்டிருந்தேன், room extern செய்வதற்கு  கேட்ட போது  reasonable ஆக செய்து கொடுத்தார்கள் .. நிறைய family, women travelers பார்த்தேன் .. இந்த stay place.. ல்..

Room விட்டு வெளியே வரவில்லை,A quiet solo day, lived at my own pace. ...musium போகல ..next time போகணும் .. கொஞ்சம் தூரமான சொந்தக்காரங்க வீடு போல.. சென்னை ல இருந்து ...I love Vysag....

Wednesday, January 28, 2026

IVYSAG - Travel

 Day -1

பொதுவாகவே தனியாக பயணம் செய்வது பிடித்ததே இல்லை, யாராவது ஒருவரை இந்த மானம் கெட்ட  மனது எதிர்பார்த்துக் கொண்டே  இருக்கும், அதை  உடைக்கவும் விரும்பினேன்.. காலத்தின்  சூழலில் சென்னையில்  வசிப்பதால் , கிடைத்த 5 நாள் விடுப்பில் ஜெய்பூர், அகமதாபாத், மும்பை மூன்றுக்கும் flight check செய்ததில் , வாய்பில்லை, ராசா என்று தோன்றியது.. மண்டை குடைந்ததில் , தமிழ் ன்னு  ஒரு Friend, ஏன்  நீங்க vysag போகலாமென்னு கேட்க, bus ticket reasonable ஆக இருந்தது, yes என்று book செய்து கிளம்பி விட்டேன் , ஒரு சில இடங்கள் தனிமையில் சென்று இருந்தாலும் நீண்ட வருடங்களாக அவ்வாறு சென்றதில்லை...








Treebo imperia hotel ல  room book, பண்ணியிருந்தேன் ... 7 .30 க்கு reach பண்ணவேண்டிய bus yes 8.00 கெல்லாம் spot  ல இறக்கி விட, auto பிடித்து போகனும்  போல என்று auto விசாரிக்க அந்த தம்புடு , அக்கடா  சூடண்டி  என்று காண்பிக்க , பிடனியில் இருந்தது hotel..

12.00க்கு check in, room free இருந்தால் கொடுக்கிறோம் என்றார்கள் 9.00க்கு கொடுத்துவிட்டார்கள்.. ஹை ஜாலி..

போய் பார்த்தால் அப்படி ஒரு luxury room, வெளிய போகவே மனசுவரலெ, bed, room toilet  எல்லாம் செம்ம neat.. நல்லா குளிச்சு நிதானமா ready ஆகி, கொஞ்சம் rest எடுத்து மதியத்திற்கு மேல் , வெளிய வந்து ஆந்திர meals கிடைக்கல , moodles வாங்கி , முழுங்கி விட்டு, uber la Taxi போட்டு, Thotla konda, buddhist monestry போனேன்.. அந்த taxi driver, hindhi ல அங்க எதுக்கு போறீங்க, அங்க ஒன்னுமே இல்ல, வெறும் lovers வந்து போவாங்க பார்க்க ஒன்னுமே இல்ல, என்று சொன்னதை தாண்டி, சென்றேன்,..

ரொம்ப அழகான சிறிய மலை குன்று, அந்த period la அவ்ளோ planning ஓட அமைந்திருந்த ,  அனைத்து கட்டிட அமைப்பும் வியக்க வைத்தது, planning designing material used and the methodology, Woww.. என்று வியந்து வியந்து பார்த்துவிட்டு , கீழ் வந்தால் வங்காள விரிகுடாவை மலை மேலிருந்து பார்க்கும் view அதி அற்புதம், cab return க்கு போட்டால்  கிடைக்கவில்லை, ..

4பேர் மூன்று bike ல  வந்திருந்தார்கள், lift கேட்டு  கீழே வந்தேன் அதில் ஒருவர் Ruchi konda beach வழி போறேன், drop பண்றேன் என்றார் , yes சொல்லி  அங்கே இறங்கி கொண்டேன், நான் இப்போ சென்னை வாசியாகி விட்டதால், அவர் raajasthan ஜெய்பூர் என்றார்..

Bye, பையா .. Thank you சொல்லிவிட்டு வெறும் 10 rs க்கு இஞ்சி tea குடித்து விட்டு, beach ல்  அமர்ந்து வேடிக்கை பார்த்து, திரும்பி வரும் வழியில், நிறைய கம்மல் வாங்கினேன்.. செம்ம cheap..

6 மணிக்கு அங்கிருந்து, கைலாசகிரி சென்று ரசித்து விட்டு, சில குட்டி பொண்ணுங்க solo travelers ஆ என்று கேட்டதற்கு பெருமையாக ஆமாம் சொன்னேன், திரும்ப Uber book செய்து காத்திருந்த நேரத்தில் ஒரு தம்புடு , நான் safe ஆக சென்று விடுவேனா என்று check செய்து கொண்டார்..

Road neat ஆக இருந்தது, பெரும்பாலும் குப்பை கண்ணில் படவே இல்லை, நல்ல reasonable ரேட்டுக்கு  stay.. good.. இரவு தங்கி இருந்த இடத்திற்கு அருகில் restaurant, treebo வினுடையது , சென்று சாப்பிடேன்... அந்த இசை சூழல் என் தனிமை எல்லாமே விரும்பி அனுபவித்தேன்..

முதல் நாள் இனிதே சென்றது 

Tuesday, August 4, 2020

மனசெனும் மாய(யா) விசை - 2

                                 


வானின் பெருவெளியெங்கும் அலைந்து திரிகிறது விசும்பு, மனம் போலவே...
அலைந்து  அலைந்து ஆழியின் உட்செல்கிறது மனம் போலவே....ஆலி
பிரவாகம் என பொங்கி படர்கிறது  மனமெலாம்....

ஜான்சியின் பூங்காக்களில் சின்னஞ் சிறுமியர் உதட்டு சாயத்துடன் கண்டிப்பாக நண்பர் அல்லது  கணவர் குழந்தையுடன் பார்க்க முடிந்தது..கல்விக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை என்பதை உணர முடிந்தது...

ஜான்சி ராணியின் கோட்டை அரண்மனை அரசாங்கத்தால் நடத்தப்படும் musium அனைத்திலும் ஜான்சியின் ராணி லக்ஷ்மி பாயின் பெருமைகள் உணர்வு பொங்க பார்க்க முடிந்தது... எப்போழ்தும் பெண்களின் வாழ்வு போராட்ட களமோ...

சைவ உணவு கிடைப்பது சற்றே அரிதாயிருந்தது..களிமண்ணும் சுண்ணாம்பும் கலந்து பூசப்பட்ட மேற் கூரையில்  சிதைந்த நிலையிலும் அழகுடன் பரிணாமளிக்கும் ஓவியங்கள்..

சிறிய அரண்மனை நகருக்கு மத்தியில உள்ளது அதன் வெளியில் வந்தால் சாலை   ஓரத்தில் தள்ளு வண்டியில் முக்காடிட்ட வயதான பெண்மணி ஒருவரின் தேனீர்  கடை இருந்தது... அவர்கள் ஒவ்வொரு முறையும் புதிதாக பாலை காய்ச்சி கண்டிப்பாக இஞ்சி போட்டு வெறும் ஐந்து ரூபாய்க்கு வாழ் நாள் முழுமைக்கும் மறக்க முடியாத டீ... அவரின் எளிமையான முகம் அப்படியே நெஞ்சில் இருக்கிறது..

கஜுராஹோ வில் வாடகைக்கு சைக்கிள் எடுத்து ஊரசுற்றினோம்.... என் நீண்ட தோள் பையை ஹாண்டில் பாரில் மாட்டியிருந்தேன்  ஒரு ஏற்றத்தில் பெடலில் கால் வைத்து ஏறி இறங்கும்போது பட் என்ற ஒலியுடன் ...நெஞ்சு முன் பாரில் ஓங்கி அடிக்க தங்கும் அறை வந்து பார்த்த போது அப்பளமாய் நொறுங்கி போயிருந்தது மொபைல் போன்...

உலகத்துடனான எல்லா தொடர்பும் துண்டிக்கப் பட்டது...whatsup ல் வேறு இல்லை, நாம் உயிரோடு இருப்பதே தெரியாதே... ஒவ்வொரு முறை தொடர்பு எல்லைக்கு அப்பால் செல்லும் போதும் எனது இறகுகள் விரிந்து கொண்டே பறந்தன...

Sunday, August 2, 2020

மனசெனும் மாயா(ய) விசை -1

                       

மனசு எது சார்ந்து இயங்குகிறது.. உடல்சார்ந்தா, உயிர் சார்ந்தா.. எவ்வாறு தவிர்த்திடினும் நினைவுகளால் எண்ணங்களால் அலைகளியும் மனதை எங்கு சென்று நிதானிப்பது ,பயணங்களிலா... ஆசை நிராசை விருப்பு வெறுப்பு  சுழன்று அடிக்கும் மாய(யா) விசை மனசே நீ தானா...

ஓர்ச்சா வின் சாலைகள் சுத்தமானவை , கஜுராஹோவிலிருந்து கிளம்பிய போது ஓர்ச்சா வரும் எண்ணம் இல்லை..கொரியன் ஒருவர் உடன் பயணித்தார்.. அவர் தான் ஓர்ச்சா பற்றி கூறினார்.. மத்தியப்பிரதேசத்தில் உள்ளது ஓர்ச்சா ..கிட்டத்தட்ட எழுநூறு வருடங்களுக்கு முன் குளியல் அறை கழிப்பறை என்று திட்டமிட்டு கட்டப்பட்ட பல அடுக்குகள் கொண்ட அரண்மனை (planned multi storied palace)..    ஓர்ச்சாவில் கோட்டையும் கோவிலும் அரண்மனையும் இருந்தது.. பெரிய கடாயில் காய்ச்சிய பால் இரவும் கிடைக்கும்..சற்றே அமைதியான ஊர்.. கஜுராஹோவிலிருந்து இரயில் வண்டி சிறிதே மெதுவாக நகர்ந்த போது இறங்கிகொண்டோம்..

காசியில் கிருஷ்ணமூர்த்தி (ராஜ்காட்)
பவுணடேஷனின், உலகளாவிய கூடுகைக்கு சென்றபோதுதான் கஜுராஹோ, ஓர்ச்சா, ஜான்சி க்கு பயணித்தது..

ராஜ்காட் க்ரிஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் பல ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது... வனத்தின் உள்ளே நடை பாதையில் நரிகள் எந்த இடையுரும் இன்றி நடமாடிக்கொண்டிருக்கும்... முகேஷ் குப்தா அந்த இன்ஸ்டிடியூடில் தான் இருக்கிறார்.. சிரித்த முகத்துடன் சிரிக்க சிரிக்க பேசும் அவரை மிகவும் பிடித்தது.. அப்படி ஒரு தோழமை...என்னை இஸ்ரேல் க்கு போக சொன்னார்.. அங்கே ஒரு commune இருப்பதாகவும் அந்த life style எனக்கு பிடிக்கும் என்றும் சொன்னார்...எல்லாவற்றையும் கேட்டுவிடுகிறதா மனது...

காசியின் நெருக்கடியான சந்துகளில் கடாயில் பால் காய்ச்சப் படுகிறது... மணிகர்ணிகாவில்   ஒன்றன் பின் ஒன்றாக இறந்த உடல்கள்  சிதையில் இடப்படுவதை கண்ணுற்ற இரவு தூக்கம் தொலைந்தது.. கங்கா ஆரத்தி ஒருபுறம் ....உடல் முழுக்க திருநீறு பூசிய நிர்வாண சாமியார்கள் .மிக மலிவு விலையில் நடையோர ஓவியங்கள் , சந்து சந்தாக நுழைந்து துப்பாக்கி ஏந்திய காவலர்களுக்கு மத்தியில் நடந்து காசி விசுவநாதரை வணங்குவது என்று காசி ஒரு வித்தியாசமான அனுபவம் தான்....ஆ அந்த படகில் போனோமே கங்கையில்...அந்த பாங் எனும் பணத்தை ருசிக்காமல் வந்தது இன்றளவும் வருத்தம் தான்...

இந்த கோரானா சமயத்தில் எவ்வாறு இருக்கும் காசி...

இந்தியாவில் எனக்கு பாண்டிச்சேரிக்கும் மணாலிக்கும் , ஹிமாச்சல்  பிரதேசத்திற்கும்,  ஸ்ரீ நகர் கும்,  ஹம்பிக்கும் கோகர்ணா விற்கும் இணையாக பிடித்த ஊர் கஜுராஹோ.....

ஊரே மோனத்தில் ஆழ்ந்து கிடக்கும்.... மக்கள் துயில் எழும்புவதே 7.00 க்கு மேல் தான் எந்த பரபரப்பும் இல்லாமல் அனாயாச பொறுமையுடன் இயங்கும் ஊர்...தெருக்கள் மிகவும் சுத்தமாக இருக்கும்...cycle வாடகைக்கு எடுத்துக் கொண்டு சுற்றினோம்... ஆம் காலையில்  ஊர் நடுவில் பெரிய குளத்தை பார்த்த படிக்கு ஒரு டீ கடை இருந்தது.. தினமும் அவர் நிதானமாக போடும்இஞ்சி டீ யில் தொடங்கும் நாள், இரவு ஒரு சிறிய மைதானத்தில்  கூடும் நடை வண்டி உணவகங்களில் முடியும்...ஒரே ஒரு wine shop இருந்தது... குட்கா போட்டு நிறைவடைந்து விடுவார்கள் போல...

ஒரு பழம் பொருட்கள் விற்கும் தனியார் கடை யில் மிகவும் வித்தியாசமான அழகான கைவினை பொருட்கள் கிடைத்தன...

அரசு தினமும் நடத்தும் நாட்டுப்புற நடன நிகழ்வு ஒன்று உண்டு..உண்மையின் உண்மையில் அவ்வளவு அற்புத நடனங்கள்..
கஜுராஹோ வின் light show மிகவும் பிடித்தது...

அழகான சிற்பங்கள்..அழகான ஊர்...



Wednesday, July 29, 2020

யாம்...


யாம் காற்றாய் சங்கமிப்பவர்கள்....
எம் இரவுகளின் காலங்கள் வானின் நீள அகலங்கள்...
நிலவும், புவியும், வெளியும் அற்ற போலிகள்.... கலாச்சார காவலர்கள் நான்கு சுவற்றிற்குள் மடியட் டும்...
யாம் முத்தங்களை நட்சத்திரங்களாய் விண்ணில் மிதக்கச் செய்வோம்...அவை புவியிறங்கி வண்ணத்துப்பூச்சிகளாய் மனிதம் வளர்க்கட்டும்......

Tuesday, July 28, 2020

                      Dancing of Birds ---- 4


செம்பூத்து எப்பவும் அருவி மரத்துக்கு வருகிறது..(greater coucal) அடர் செம்பு நிறத்தில் கருப்பு முழுவண்ணத்தில் கண் அடர் சிவப்பு நிறத்திலும் இருக்கும், ஏதோ மந்திரத்தை ஜெபிப்பது மாதிரி  ஒரு சப்தம்  கொடுக்கும்..எனக்கு செம்பூத்து பிடிக்கும்.. அது தேவேலோகப் பறவையாம்...அது மட்டுமில்லை எல்லாப் பறவைகளுமே தேவேலோகப் பறவைகள் தாம்...

இரண்டு தினங்களுக்கு முன் ஒரு மாலை நேரத்தில் வானம் கருமை படர்ந்து குளிர் காற்றுடன் மழைக்கு முன்னோட்டம் பார்த்துக்கொண்டிருந்தது நானும் ஜன்னல் வழி வானம் பார்த்துக்கொண்டிருந்தேன், மேகம் கூடிக்கொண்டிருந்தது ஒரே ஒரு கழுகு மட்டும் வானத்தில் மிக உயரத்தில் வட்டமிட்டுக்கொண்டிருந்தது..கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் அந்த உயரத்திலேயே பறந்து கொண்டிருந்தது..நான் தான் சோர்வுற்று வந்தமர்ந்து கொண்டேன்..

கழுகு அது பறக்கும் உயரம் எதையும் லட்சியம் செய்யா பயமறியா பார்வை ஏனோ கழுகை பிடிக்கும் ,  zoo வில் அடைத்து வைத்திருப்பதை கண்ணுறும் போது மனசுள்
சொல்ல முடியா அழுத்தம் தோணும்.. மடப்பசங்களா அதன் உயரம் வேறு அதன் பார்வை வேறு ஏன் இப்படி அடைத்திருகி றீர்கள் என்று தோன்றும்....கார்த்தி கிட்டே ஒரு தடவை சொன்னேன் ஏன் boss  VOC park ல அந்த hindu office பக்கம் வளைவு எடுத்து LIC சிக்னல் வர்றப்போ வெளிய இருந்து பார்த்தாலே zoo ல கழுகு அடைக்கப்பட்டது தெரியுமே பார்திருக்கீங்களா...

ஆமா boss பார்த்திருக்கேன்.. ஒரு case போட்டு அதை திறந்து விட சொல்லணும் பாஸ்..இல்லே night போயி பூட்ட ஓடைச்சிடுவோமா..இப்படியாக நாங்கள் பேசிக்கொண்டதுண்டு....கழுகிற்கு அது பறக்கும் உயரம் தெரியுமா....மழையும் காற்றும் கண்டும் தன் இடம் தேடி ஓடாமல் நிலை நின்று எப்படி பறக்கிறது...

நம் உயரம் என்ன இயல்பில் நாம் யார் சுற்றமும் சூழலும் புறந்தள்ளி இயல்பில் யோசிப்போமாயின் மூச்சு திணற அழுந்திக்கொண்டிருக்கும்  மனசோட சின்ன கதறல் கேட்கும்....

நேற்று திவ்யா phone ல ஸ்ரீ எங்கே... Hosur ல திவ்யா ..கோயம்புத்தூர் போகலியா?...இல்லே போல... ஏனோ coimbatore ரோட நெருக்கம் கொஞ்சம் வருசமாவே பயமுறுத்துது.. ஓடிக்கொண்டே இருக்கும் மக்கள் பெருக்கிக்கொண்டிருக்கும் வாகனங்கள் வளர்ச்சி வளர்ச்சி என்று வந்துகொண்டிருக்கும் பாலங்கள் விரிவு படுத்தப்படும் சாலைகள்... எதற்கோ தோண்டி மூடப்படும் குழிகள்...இதோ மற்ற அழிவின் பாதையில் செல்லும் பெருநகரங்களின் வரிசையில் கோவையும்...

கார்மேக குடையின் கீழ் பறக்கும் கழுகும்..மிக மெதுவாக தாழ பறக்கும் செம்பூத்தும்  கொஞ்சமாய் வீட்டுக்குள் எட்டிப் பார்த்துவிட்டு செல்லும் சிட்டுக்குருவியும்... இன்னும் மனிதர்களை தவிர்த்து தன் இயல்பில் வாழும் வேறு உயிரினங்களும் கூடி வாழும் இடத்தில் தான் ,, மனமே பூவாய் மலரும் வாழ்வை வாழ முடியும் இல்லையா….