Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Thursday, August 25, 2011

நினைவுகளில்.......


பாதை தொலைத்த
பயணம்போல்தான்
உன்னைத் தொடர்கிறேன்
நீ அறியாமலே..

தெளிந்த குளத்தில் கல்
எரிவது போல்தான் உன்
நினைவை கிளறும் போது
கலைந்து போகிறது மனம்..

எவ்வளவு மொழிகள்
இருந்தென்ன உன்னுடனான
என் அன்பை பகிர வார்த்தை
கிட்டவில்லை எனக்கு..

உன் நியாபகத்தில்
உறங்கும் போதும்
விழித்திருக்கவே
செய்கிறது மனம்..

நம்மிடையே இருக்கும்
இடைவெளி சிலந்தி
கட்டும் வலை போலவே..
மெல்லியதாய்...ஆனால் தொடர்ந்து...

நன்றி- MY DEAR FRIEND ARCHITECT  SENTHILPAVAI KASIANNAN  Ph.d for the cute photo

4 comments:

  1. //நம்மிடையே இருக்கும்
    இடைவெளி சிலந்தி
    கட்டும் வலை போலவே..
    மெல்லியதாய்...///

    Make it Strong, :-) good work, pakkaa feel well done sri

    ReplyDelete
  2. இடைவெளியை strong ஆக்கனும்ன்னு சொல்றீங்களா முரளி?

    @ ஸ்ரீ - எனக்கும் பிடிச்சிருக்கு இந்தக் கவிதை. பேசும்போதே சொல்லணும்ன்னு நினைச்சேன்...

    ReplyDelete
  3. @சுகிர்தா..
    ஓ இப்படியொரு அர்த்தம் வருதா? நான் நினச்சேன் total poem- make it strongnu சொல்றாப்படின்னு..
    முரளிகிட்ட தான் கேக்கனும்..

    thank u dear.....

    ReplyDelete