Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...
Showing posts with label என்னமோ தோனிச்சு. Show all posts
Showing posts with label என்னமோ தோனிச்சு. Show all posts

Thursday, October 13, 2011

அலப்பரை...

1.கண்ணா sorry இது இப்படி இருக்கனும் கன்னா பின்னானு படிச்சு (ஜெயமோகன்,சு.ரா,எஸ்.ரா, நாஞ்சில்,அம்பைனு) இலக்கியத்துக்குள்ளே நுழையலாம்னு பார்த்தா சமீபத்தில படிச்ச கேள்வி பதில் இதை கேள்விக்குறியாக்கிடும் போலே..என்னாததுவா?

கேள்வி--இலக்கியவாதிக்கும் அரசியல் வாதிக்கும் என்ன வேறுபாடு ?
பதில்:- வேறுபாடு எதுவும் இல்லை ஒற்றுமை வேனா இருக்கு ரெண்டுபேருமே டைம் வேஸ்ட் பண்றவங்க..
இத படிச்சதுக்கப்புறம் என் இலக்கியவியாதி sorry இலக்கியவாதி ஆசையை தள்ளிப்போட்டுள்ளேன்...

2.சீனா வுல 18 வயசுக்குள்ளே இருக்கிறவங்கள்ள books படிக்கிறவங்க 70% நம்ம இந்தியாவுல 30%...என்னத்தச்சொல்ல..

3.நவீன கவிதை படிக்கிறப்போ ஏதோ குமட்டல்வருதுன்னு சொன்ன செல்வேந்திரன் blog படிச்சதுக்கப்புறம் கவிதை பத்தியோசிக்கவே முடியலை வெறும் காத்துதான் வருது..தப்பிச்சீங்க கொஞ்ச நாளுக்கு அந்த இம்சை இருக்காதுன்னு நினைக்கிறேன்

4.உள்ளாட்சி தேர்தல் வருதில்லே உங்க வீட்டுப்பிள்ளைன்னு நெறைய பேர் அலையறாங்க சாக்கிறதை சொத்துல பங்கு கேக்கப்போறாங்க..

5.ஊர்ல இருக்கிறமரத்தை எல்லாம் தேடிப்பிடித்து வெட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ள நெடுஞ்சாலைத்துறை சமீபத்தில் இந்த புண்ணியத்தயும் கட்டிக்கொண்டுள்ளது. மருதமலை ரோட்டில் இருந்த ஆலமரங்களை வெட்டி உள்ளார்கள்.ஆலமரங்கள் அந்த ரோட்டில் தான் இருந்தது.எல்லாமே  பெரிய மரங்கள்.இம்மரங்கள் மட்டுமே இரவிலும் ஆக்சிஜன் வெளியிடும் தன்மை உள்ளது.வேதனையாத்தானிருக்கு..

Wednesday, September 7, 2011

வானம்...பாடி..

எனக்கு வானம் ரொம்ப பிடிக்கும்..எல்லாவற்றயும் ஒரு குடையின் கிழ் தாங்கும், சகலமாயும் சர்வமாயும் பரந்து விரிந்து கிடக்கும் அதன் பிரம்மாண்டம் என்னை பிரம்மிப்புக்குள்ளாக்குகிறது..வானம் பார்க்க எல்லா நேரமும் பிடிக்கும் என்றாலும் அதிகாலை, மதியதுக்கு மேல், இரவு ரொம்ப நல்லாயிருக்கும்..இதோ என் வானம்..




அடர்ந்த மரத்தின் நிழலின்
கிளையினூடே
கீழிருந்து தெரியும்
திட்டுத் திட்டாய் வானம்...

அடர் நீலம்,இள சிவப்பு
வெள்ளையும், சாம்பலும்
என வண்ணம் காட்டும்
அழகு வானம்

கர்ப்ப ஸ்திரீ போல்
கார்கால முகிலை
சுமந்து திரியும்
தாய்மை வானம்..

நானே அனைத்தும்
எனக்குள் எல்லாம் என்று
எட்டுத்திக்கும் திரியும்
சுதந்திர வானம்

மாறிக்கொண்டேயிருக்கும்
பாவனையும் கலைத்து
கலைத்து போடும் கோலமுமாய்
சிதறிக்கிடக்கும் சிங்கார வானம்

இரவில் விண்மீனயும்
வெள்ளியயும் உடுத்தி
வேறோர் உலகம் காட்டும்
விந்தை வானம்

கதிரவனுக்கு உதயம்
கொடுத்து நிலவுக்கு இடம்
கொடுத்து பூமியை உயிர்பிக்கும்
நித்ய வானம்

மண்ணை அளக்கலாம்
மழை நீரை அளவிடலாம்
காற்றை கட்டுப்படுத்தலாம்
எல்லைகளில்லாமல் ஏகாந்தமாய்
விரிந்து கிடக்கும் வானத்தை...



Sunday, August 28, 2011

சிறகுகள் தேடி....


”எனக்கு பறவைகளிடம் மிகவும் பிடித்தது அதன் சிறகுகள் ..எங்கு வேண்டுமானாலும் பறந்து போக முடியும் அதன் நிலை என்னை மிகவும் கவர்கிறது..அதற்காக அது கர்வப்பட்டுக்கொள்ளலாம்”

அது ஒரு விழிப்பும் இல்லாத உறக்கமும் இல்லாத நிலை..ஏதோவொரு மயக்க நிலை மனம் மட்டும் விழித்து இருந்தது..ரொம்ப சந்தோசமாக கூட இருந்ததுன்னு சொல்லலாம்..அவன் என் கூட இருந்தான்...கூட என்றால் ஏதாவது பேசிக்கொண்டும் சிரிக்க வைத்துக்கொண்டும் இருந்தான்..நான் அவனின் தோள்களில் சாய்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்..சுற்றிலும் பார்பவையெல்லாம் பசுமையாகவும் இனிமையாகவும் இருந்தது..என்ன பேசினான் என்று தெரியவில்லை

நான் மிக ரசித்துக்கேட்டுக்கொண்டிருந்தேன்...ஒரு அற்புத உலகம் சிருஷ்டிக்கப்பட்டு நானும் அவனும் மட்டுமே அதில் இருப்பதாய் நினைத்தேன்.நேரம் காலம் அறுபட்டு எல்லாம் ஏகாந்தமாய் தோன்றியது..பேசியதும், இசைத்ததும் ஒன்றாய் நடந்ததுமென பொழுதுகள் கரைந்து கொண்டிருந்தது..

அப்போது தான் அவன் சொன்னான் “கிளம்புகிறேன்” ”நானும் “ என்கிறேன்..”உன்னால் வரமுடியாது, உன்னிடம் சிறகுகள் இல்லை”அப்பொழுது தான் கவனிக்கிறேன்..ஆமாம் என்னிடம் சிறகுகள் இல்லை..”எங்கே என்னுடயது யாரிடம் கேட்பது” என்கிறேன்..”அங்கே ஒளி நிறைந்து காணப்படுகிறதே அங்கே போய் கேள்’ என்று சொல்கிறான்..

சர்வமும் நானென சொல்வதாய் ஒரு ஒளி பிம்பம் அதை வணங்கி பின் கேட்கிறேன் ”என் சிறகுகள் நான் பறக்கணும்” என்கிறேன்..ஒளி என்னை நன்றாய் ஊடுருவி பார்த்தது போலும், பின் அசரிரீயாக ஒலித்தது “உன் சிறகுகள் உன் குடும்பத்திற்காய் உன்னிடமிருந்து எடுத்து கொடுக்கப்பட்டு விட்டது,அதோ பார் உன் கணவன் உன் குழந்தை” என்று காண்பிக்கப்பட்டவர்கள் ஒரு ஓரமாக நின்று என்னை பார்த்துக்கொண்டிருந்தார்கள்..எனக்கு ஒன்றும் தெளிவாகவில்லை..”யார் கணவன் யார் குழந்தை எதற்கு என்சிறகுகள் பறிக்கப்படவேண்டும் ” எனும் என் வினாவுக்கு “அவர்கள் உன்னை சார்ந்தவர்கள் அவர்களுக்கு சிறகுகள் இல்லை உன்னிடமிருந்து கொடுக்கப்பட்டுள்ளது இதுவே உலக நியதி” என்றும் சொன்னது..

எனக்கு திருமணமாகி விட்டதா? எப்போது ..என்னவானாலும் என் சிறகுகள் ஏன் பறிக்கப்படவேண்டும்..எதயும் நம்ப மறுத்த மனம்..சட்டென நியாபகம் வர அம்மாவை காணவில்லயே..அவர்களுக்கு தெரியாமல் நான் எதுவும் செய்வதில்லையே..அம்மாவிற்கு கண்டிப்பாய் தெரிந்திருக்கும் அவர்களை தான் கேட்கனும் “அம்மா அம்மாஆஆஆ...”

“என்ன என்னடி எதுக்கு இப்படி கூப்பாடு போட்ற, விடிந்தது விடியாததுமா?..கனவு எதாவது கண்டியா? சரி சரி எந்திரி” சொல்லிவிட்டு நகரும் அம்மாவிடம் சொல்கிறேன் “என் சிறகுகளை தரமாட்டேன் எனக்கு வேண்டும்” அழுத்தமாய் நான் சொன்னதற்கு அர்த்தமாய் சிரித்து நகர்கிறார் அம்மா...

Thursday, August 25, 2011

நினைவுகளில்.......


பாதை தொலைத்த
பயணம்போல்தான்
உன்னைத் தொடர்கிறேன்
நீ அறியாமலே..

தெளிந்த குளத்தில் கல்
எரிவது போல்தான் உன்
நினைவை கிளறும் போது
கலைந்து போகிறது மனம்..

எவ்வளவு மொழிகள்
இருந்தென்ன உன்னுடனான
என் அன்பை பகிர வார்த்தை
கிட்டவில்லை எனக்கு..

உன் நியாபகத்தில்
உறங்கும் போதும்
விழித்திருக்கவே
செய்கிறது மனம்..

நம்மிடையே இருக்கும்
இடைவெளி சிலந்தி
கட்டும் வலை போலவே..
மெல்லியதாய்...ஆனால் தொடர்ந்து...

நன்றி- MY DEAR FRIEND ARCHITECT  SENTHILPAVAI KASIANNAN  Ph.d for the cute photo

Sunday, August 7, 2011

நீ நான்.. சில பொழுதுகள்


வா
சிட்டுக்குருவியின் மொழி பழகலாம்...
சில சங்கீதங்கள் ஒன்றாய் ரசிக்கலாம்
சில நூல்கள் பேசித்திரியலாம்.

முன்பனி இரவை பகிரலாம்..
பெளர்ணமி நிலவில் காயலாம்..
கடற்கரை ஓரம் நடக்கலாம்..

சில பல தூரங்கள் சேர்ந்தே
கடக்கலாம்..
சில தடைகள் தாண்டலாம்..
நடை முறைகள்  நாம் மீறலாம்

சில கணங்கள் என்னுடன் இரு, அவை
நிமிடங்களாய் கரையட்டும்
சிலநாட்கள் பிரிந்திரு
அவை யுகங்களாய் நகரட்டும்

முறை சொல்லும் உறவொன்றும்
வேண்டாம்
பட்டாம் பூச்சியின் சுதந்திரத்தோடு
இக்கணத்துக்காய் பறந்திருப்போம்
வா....


Monday, August 1, 2011

சிதைவுகள்

பண்னை வீடு,
திண்ணை வீடு
ஒடை ஓர அம்மச்சி வீடு,
தோப்போற அப்பச்சி வீடு

அடுக்கடுக்காய் மாடி வீடு
சிட்டுக்குருவிக்கும் இட மில்லா
சின்ன சின்ன வீடு
நானிருந்த நகரத்து வீடு

அனைத்தயும் விட்டு
உரைவிடப் பள்ளி போய்
பட்டம் வாங்கி
நாடு விட்டு நாடு போய்

உறவு தேடி உறவு தேடி
உயிரில்லா புன்னகையுடன்
என் கூட்டுக்காய் என் கூட்டுக்காய்
அலையும் பறவை நான்....

Thursday, July 28, 2011

துளிர்...

ரசம் போன கண்ணாடியில் 
முகம் பார்பதுபோல்
தொடர்ந்த அலச்சியத்தால்
நைந்து போன பக்கங்களாய்
ஏக்கமும்
துக்கமும்
தனிமையுமான
பொழுதில்
அன்பை தாங்கி வந்த
அவளின் குறுஞ்செய்தி
எனக்குள் இதமாய் 
ஒருதுளிராய்
புன்னகை...


(THANKS TO MY FRIEND SENTHILPAVAI KASIANNAN.Ph.D for the cute photo)

Wednesday, July 20, 2011

உயிர்ப்பு..

 சடுதியில் உருவாகும் உயிருக்குள் உறையும் 
எனக்கிது எதுவரையோ? 

காணாமல் புலம்பும் கண்டவுடன் ஒடுங்கும்
எனக்கிது எதுவரையோ?

துக்கம் கொள்ளும், தூக்கம் கொல்லும்
எனக்கிது எதுவரையோ?

மெளனம் சப்தமாயும், இரைச்சல் நிசப்தமாயும்
எனக்கிது எதுவரையோ?


உயிரது உடல் தேடும்,உயிரொடு உயிராகி
உனக்குள்ளே கரையும் நாள்
எது
அதுவரையோ?