Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...
Showing posts with label எனக்குத்தெரிந்த இவர்கள். Show all posts
Showing posts with label எனக்குத்தெரிந்த இவர்கள். Show all posts

Thursday, January 5, 2012

”ஒரு GOOD EVENING"

December 18 -2011 மாலை ஆறுமணிக்கு தொடங்கியது ”விஷ்ணுபுரம் இலக்கியவிழா”. அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த நேரத்திற்கு சரியாக ஆரம்பித்துவிட்டதற்காகவே ஒரு சபாஷ் போடலாம். மூத்தஎழுத்தாளர் ”பூமணி” அவர்களுக்கு பாராட்டும் விஷ்ணுபுரம் இலக்கிய விருதும் கொடுத்தார்கள்.இவ்விழா விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில் ஜெ.மோ. வின் வாசகவட்டாரங்களால் அவரின் தலைமையில் நடத்தப்படுகிறது. மொத்தபரித்தொகை “fifty thousand" அப்புறம் ஒரு கேடயமும்.


”கோவை ஞானி “ தலைமையேற்க (தவிர்க்க முடியாத காரணங்களால் நாஞ்சில் வரவில்லை என்று சொன்னார்கள்) துவங்கியது விழா. இவ்வளவு முதிய வயதிலும் அவரின் தெளிவான பேச்சும் அமரச்சொல்லியும் நின்று கொண்டே பேசியதும் he is simply great. 


பாரதிராஜா தான் chief guest  இவ்விருதினை ”பூமணி” அவர்களுக்கு வழங்கி தான் பெருமை பட்டுக்கொள்வதாகவும் தான் ஒரு புத்தகமும் அவருடையதை படித்ததில்லை ஆனாலும் இனிகண்டிப்பாய் படித்து அவரிடம் அதுபற்றி பேசுவதாகவும் கூறினார்.ரொம்ப honest டா இருந்தது அவரின் பேச்சு.


யுவன் பேசும்போது “சு.ரா” விடம் பூமணியின் எழுத்துக்களுக்காக வாதிட்ட தாகவும் இன்னும் நிறைய பேரிடம் பேசியதற்காகவும் பரிசுத்தொகையில் கமிஷன் கேட்டார்(தமாஷாகத்தான்)யுவன் நான் இன்னும் படித்ததில்லை i have to read  his books..


கன்னடத்து கவிஞர் “பிரதீபா நந்தகுமார்” கன்னட மொழியில் ஒரு கவிதை வாசித்தார்.கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக இருந்தது.அர்த்தம் தான்  விளங்கவில்லை.அதற்கு முன் தமிழில் நீண்டதொரு உரை நிகழ்த்தினார். (english ல எழுதி வச்சு படிச்சாங்க) மலையாளத்திலும் கன்னடத்திலும் இவ்வாறான இலக்கிய பகிர்வுகள் நடப்பதாகவும் தமிழிலும் நடந்தால் நன்றாய்இருக்குமென்று சொன்னது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று.i accept it mam.


பூமணி அவங்க எழுதி கொடுத்ததை senthil kumar வாசிச்சார். அதில் நிறைய மொழிபெயர்ப்பு செய்யனும் என்று சொன்னார்.அப்பதான் மற்ற மொழிகளின் இலக்கியத்தையும் உணர்ந்து கொள்ள முடியும் என்றும் கூறினார்.ஆமான்னு தோனிச்சு. 


இப்ப ரொம்ப சிரத்தை எடுத்து உலக மயமாக்கல்ன்னு சொல்லி பொருளாதார சுரண்டல் நடத்த plan போட்றதுக்கு பதிலா உண்மையில் நிறைய நல்ல வேற்று மொழி இலக்கியங்களை மொழிபெயர்க்கனும். ஒரு கதையின் முன்னுரையில் படித்தேன் “மாந்தர்குலம் ஒன்றே என்பதன் அடையாளம் மொழிபெயர்ப்பு.கலை, இலக்கிய, தத்துவ உலகங்களில் மொழிபெயர்ப்பு நடை பெறுமானால் அதுவே உலக வரலாற்றில் “முன்னேற்றம்” ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.பலவிதங்களிலும் புதிய யுகக்கொள்கைகள் மலர்வதற்கும் ஏதுவாயிருக்கும்.ரொம்ப சரின்னு தோனிச்சு.


செல்வேந்திரன் தொகுத்துவழங்கினார்.இவ்வளவு பெரிய மரியாதையை ஒரு எழுத்தாளருக்கு ஒவ்வொருவரும் சிரத்தையாக அவரவர்களின் கைகாசு போட்டு நடத்தி கெளரவிப்பது என்பது சாமானிய விஷயமல்ல. மனப்பூர்வமான பாராட்டுக்குரியது இவ்விஷயம். யுவன் சொன்னதுபோல் அவர்கள் அந்த மரியாதையை செய்துவிட்டார்கள் வாசகர்களாகிய நாம் எவ்வாறு செலுத்தப்போகிறோம் ? கண்டிப்பா அந்த பொக்கிஷங்களை வாங்கி படிச்சுத்தான்..இல்லையா...

Friday, October 7, 2011

எஸ்.ரா என்கிற எஸ்.ராமகிருஷ்ணன்


எஸ்.ரா.வை எனக்கு அவரோட கட்டுரைகள் மூலமா தெரியும்.தேசாந்திரி, துணையெழுத்துன்னு ஆனந்த விகடன்ல வந்தப்போ தொடர்ந்து படிச்சிருக்கேன்.சிறுகதைகள் புது நடையில் யாரையும் குற்றம் சொல்லாமல் அவங்க அவங்க சூழ்நிலைங்கிறமாதிரி இருக்கும்.

எஸ்.ராமகிருஷ்ணன் என்கிற எஸ்.ராவை சந்திக்கும் வாய்ப்பு திருப்பூர் சேர்தளம் நண்பர்கள் மூலமா அமைஞ்சிச்சு.இப்படி யாரையாவது போய் பாக்கனும்னு தோனியது கிடையாது.அது ஒருவித சங்கடமா இருக்கும்.நேர்ல அந்த முகம்  எப்படி ரியாக்ட் பண்ணும்னு சொல்லமுடியாதே அதனால் ட்ரை செய்வதே கிடையாது.முரளி சொன்ன எஸ்.ரா. வேறு மாதிரி தெரிஞ்சதால போனேன்.அவரை பார்த்து பேசிவிட்டு வரும்போது தான் நினச்சுகிட்டேன். நல்ல வேளை வந்தோம் இல்லேனா ஒரு அற்புதமான மனிதரை பார்க்கும் வாய்ப்பை இழந்திருப்போமின்னு.ஏதோ ஒன்னு பண்ணனும்னு நினைக்கிறப்போ செய்திடனும்.இல்லேனா சில நல்ல சந்தர்பங்களைத் தவறவிடுகிறோம்.

எட்டுத்திக்கும்ங்கிற தலைப்புல எஸ்.ரா பேசினார்.உள் நுழையும் போதே நம்ம தயக்கத்த அவரோட சிம்பிளான நடவடிக்கைக மூலமா இயல்பாக்கினார். பார்வையாளர்கள் பக்கமா வந்து அவங்க கூடவே உட்கார்ந்து பேச ஆரம்பிச்சார்.

ஒரு பிரயாணம் எவ்ளோ விஷயங்களை கத்துக்கொடுக்குது..ஊர் சுத்தும் போதும் திரும்பி வரும் போதும் தான் வீடுங்கிறதோட அவசியம்புரியுதுன்னும், உலகமே அவங்கவங்க வீட்டு வாசல்ல இருந்துதான் ஆரம்பிக்குதுன்னு சொன்னதும்,
சக மனிசங்ககிட்ட காண்பிக்க வேண்டிய நேசம்,ஒவ்வொருத்தரோட சூழ்நிலைகள் தான் நல்லவனாவோ கெட்டவனாகவோ நடக்க வைக்குது அப்படிங்கிறதயும் அழகா சொன்னாரு.
கடவுள் பற்றிய பதில்ல நம்பிக்கைங்கிறதைவிட தேவையாயிருக்கு, அவர் பார்த்துக்குவார்ங்கிறது ஒரு செளகர்யம்தானே அப்படின்னு சொன்னார்.ஆமான்னு தோனிச்சு.
நிறைய கேள்விகள், ஒவ்வொரு கேள்விக்கும் நிதானமான ஆழமான பதில் கிட்டத்தட்ட 3மணி நேரமும் போனதே தெரியலை.நிறைவுக்கு வந்த போது இவ்வளவு சீக்கிரமாகவான்னு தோனிச்சு.

எஸ்.ரா.வுக்கு தாகூர் விருது கொடுத்திருக்காங்க. சரியான மனிதர்களுக்கான அங்கீகாரம் எப்படியாவது  வந்தடைவது ரொம்ப  சந்தோஷம்.அவரோட பயணம் இந்தியா முழுமைக்கும் நடந்திருக்கு எல்லைகள் தாண்டி மனுஷங்க ஒன்னுதான்னு அவர் சொல்ற கருத்து உண்மைதான்.அது இந்தியா மட்டுமல்ல உலகத்திலேயே எந்த எல்லை கோடும் இருக்கக்கூடாது தான்.அடிக்கடி மனச சுத்தம் பண்ணி வச்சிக்கனும்.எல்லோரயும் ஒரே மாதிரி நேசிக்கனும்..அவரோட போன் நம்பர் கொடுத்திட்டு இருந்தார் யாரோ கேட்டதற்காக எல்லாருக்கும்.வெளியில் வரும் போது எழுத்து தாண்டி ஒரு நல்ல மனிதரை சந்திச்ச திருப்தி இருந்துச்சு மனசுல...