Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Thursday, December 21, 2017

                         இடையுறு   விகிதங்கள்.......              
மூன்று தடவை வந்த missed call , அந்த நம்பருக்கு என்னை அழைக்கத் தூண்டியது,கோகிலா அக்காவின்  குரலை உள்வாங்க சற்று நேரம் பிடித்தது, என்ன ஸ்ரீ ஒருமாசமா try பண்றேன், உன்ன பிடிக்கவே முடியல, தொடர்பு எல்லைக்கு அப்பால் அப்பால் னு வருது என்றார், ஆமாங்க்கா நானே பக்கத்துல யார் மொபைலை வாங்கி கூப்பிட்டாலும் எனக்கும் அப்படித்தா சொல்லுது,,....சரி என்ன பண்றே எங்கிருக்கே,,,, அக்கா நா தோட்டத்திலே , மரம் வச்சிட்டு birds பார்த்திட்டு இருக்கேன்...

உனக்கு திருப்தியாஇருக்கா பிடிச்சிருக்கா யாருக்கும் விளக்கம் சொல்லணும்னு அவசியம் இல்லே சந்தோசமயிரு , School final கூட தாண்டாத  கோகிலாக்காவின் வார்த்தைகள் என்னை வியக்க வைத்தது, சில சமயங்களில் அப்படித்தான், சிலர் அவ்வளவாக படித்திருக்க மாட்டார்கள் , ஆனால் வாழ்க்கையை அசால்டாக சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்...

கோடிக்கணக்கில் சம்பாதித்துக்கொண்டிருக்கும் பெரியப்பா, எவ்வளவு வருமானம் வரும் என்று கேட்டதும் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது
அப்ப இளங்கோ அண்ணா பைத்தியம் பிடித்து ஓடியத்துக்கும் இப்போ பெரியம்மா cancer ல இறந்தப்பவும் சரி பெரியப்பா எல்லாவற்றையும் practical ஆக தான் பார்ப்பார், வட்டிக்கு விடுவதை எப்போதும் அவர் நிறுத்தியதே இல்லை, தேவையிருக்கிறவனுக்கு தேவையானப்ப தர்றேன், இதுல என்ன தப்பிருக்கு இதுவும் உதவிதான்  என்று சொல்லுவார்,

அவருடையது பண calculation mind, அது நமக்கு எப்பவும் ஒத்து வராது,  என்னை எங்கியாவது கூட்டிப் போ ஸ்ரீ ,  வடிச்சிகொட்டி பாத்திரம் தேச்சு , sema bore தெரியுமா , எங்கியாவது எங்கியாவது கூட்டிப்போ
இந்த மாதிரி கோகிலாக்களின் குரல்கள் சமீபமாக எனை பின்தொடர்ந்தவாறே இருக்கிறது.... குமார் மாமா நிறைய சம்பாதித்து நிறைய குடித்து நிறைய கறி திண்பவராயிருந்தார்

 குமார் மாமா இரண்டு (ஆண்)குழந்தைகள்  பெற்று சமூகத்துக்கு பெரும் தொண்டு புரிந்துள்ளார், பெரியப்பாவுக்கு மூன்று ஆண் பிள்ளைகளில் இருவர் தனித்தனியே இரண்டிரண்டு ஆணும் பெண்ணுமாகப்பெற்று சமுதாயத்துக்கு பெரும் பங்குஆற்றி உள்ளார்கள்,....பெரியப்பா ஒரு பெரிய lecture கொடுப்பார் அதில் ஆணுக்கான அடையாளப் பட்டியல் வாசிக்கப்படும் ஆண் சொந்தமா ஒரு வீடு கட்டணும் தென்னை மரம் இரண்டு வைக்கணும் ஆண் பிள்ளை பெறனும் இதெல்லாம் அதில் அடங்கும்...

கோகிலாக்காவுக்கு  புதியதாய் ஐந்தாவதாய் வாடகைக்கு விடுவதற்கு வீடுகட்ட வேண்டுமாம், அதற்கு தான் என்னை தேடிருக்காங்க, ஒவ்வொரு தடவை வீடுகட்டும் போதும் , மறக்காமல் போதும் சாமி இந்த மனுசன் இதய நோயோட ஒளச்சது, இந்த வாடகை ய வாங்கிக்கிட்டு கஞ்சி கூழு குடிச்சுக்குவோம்னு சொல்லிகிட்டே , அடுத்த வீடு கட்ட ரெடி ஆயிடராங்க, அவங்களுக்கு புதுசா ஒருக்கவலை , ஆதார் அட்டையை எல்லாத்துலயும் இணைக்கணுமாமே,, என்று கூறி எங்கேயாவது மாட்டிக்கொள்வோமா என்று ரொம்பவும் வருத்தக்கொண்டிருந்தார்

பெரியம்மாவின் ஞாபகங்களை வட்டி வசூல் time போக பெரியப்பா நினைத்துக்கொண்டிருப்பார், இல்லைன்னா அவரின் பிறந்த நாளிலோ பெரியம்மாவின் பிறந்த நாளிலோ அனாதை ஆசிரமத்துகுழந்தைகளுக்கு ஒரு நேர உணவு கொடுத்து  சமாதானம் தேடிக்கொள்ளக்கூடும்...

 எனக்கொரு மிகபெரும் கவலை  ஓலைப்பாளை யம் வந்த சிட்டுக்குருவி இன்னும் அரை கிலோமீட்டர் தூரமே இருக்கும் தோட்டத்து வீட்டுக்கு வரலை என்பதுவும் , கிணற்று நடுவில் இருந்த தூக்கணாங்குருவி கூடு எங்கு போயிற்று என்பதுமாய்........

No comments:

Post a Comment