Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Wednesday, July 20, 2011

உயிர்ப்பு..

 சடுதியில் உருவாகும் உயிருக்குள் உறையும் 
எனக்கிது எதுவரையோ? 

காணாமல் புலம்பும் கண்டவுடன் ஒடுங்கும்
எனக்கிது எதுவரையோ?

துக்கம் கொள்ளும், தூக்கம் கொல்லும்
எனக்கிது எதுவரையோ?

மெளனம் சப்தமாயும், இரைச்சல் நிசப்தமாயும்
எனக்கிது எதுவரையோ?


உயிரது உடல் தேடும்,உயிரொடு உயிராகி
உனக்குள்ளே கரையும் நாள்
எது
அதுவரையோ?

5 comments:

  1. வரேவா ஸ்ரீ...............

    //துக்கம் கொள்ளும்
    தூக்கம் கொல்லும்

    மொளனம் சப்தமாயும்
    இரைச்சல் நிசப்தமாயும்//

    சூப்பர் :-)

    ReplyDelete
  2. ஹேய் சொல்ல மறந்துட்டேன் பா.. இந்த படம் அருமையா இருக்கு, உன்ன மாதிரியே :)

    ReplyDelete
  3. ஸ்ரீ, நல்லா இருக்கு. என் வியாதி தொத்திகிச்சு போல, கிறுக்க ஆரம்பிச்சிட்டிங்க? :-))

    ReplyDelete
  4. @Sugirtha,
    என் அன்பு சுகி,
    ரொம்ப நாளா மனசுக்குள்ளே ஹ்ம் பண்ணிட்டு இருந்தேனா..இப்போ வெளியே வந்துடுத்து...படம் நல்லாருக்கா சுகி..சுட்டுட்டேன்...3d model nu ninaikiren..

    Thank u pa

    ReplyDelete
  5. @Murali,

    முரளி பாத்திங்கள்ல நீங்கதான் பொறுப்பு..Thanks pa, i have made the corrections u said..now it looks better..

    ReplyDelete