Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Thursday, October 7, 2010

Naan

நீ உடுத்தும் உடுப்பல்ல நான்
உன் உடம்புத்தோல்
மாற்ற நினைத்தால் மறைந்து போவாய்

புல்வெளியின் நீர்துளியல்ல நான்
வான் வெளியின் மழைத்துளி

கண்டதை தின்று எச்சமிடும் காக்கையல்ல நான்
பாலை  மட்டுமே பருகும் அன்னமே நான்

உன் தூன்டிலின்  புழுக்கள் மீன்களை
உணவாக்கவேயன்றி மீன்களுக்கு
உணவளிக்கவல்லவே

நெருப்பல்ல நீ அணைபதற்கு நீரல்ல
நீரல்ல நீ அணையிடுவதற்கு
பரந்து கிடக்கும் ஆகாயமும்
விரிந்து கிடக்கும் வானமுமே
                      நான்
மாற்றங்களை நான் உருவாக்குவேன்
எனக்குள் என்றும் மாற்றமில்லை

No comments:

Post a Comment