Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Sunday, August 2, 2020

மனசெனும் மாயா(ய) விசை -1

                       

மனசு எது சார்ந்து இயங்குகிறது.. உடல்சார்ந்தா, உயிர் சார்ந்தா.. எவ்வாறு தவிர்த்திடினும் நினைவுகளால் எண்ணங்களால் அலைகளியும் மனதை எங்கு சென்று நிதானிப்பது ,பயணங்களிலா... ஆசை நிராசை விருப்பு வெறுப்பு  சுழன்று அடிக்கும் மாய(யா) விசை மனசே நீ தானா...

ஓர்ச்சா வின் சாலைகள் சுத்தமானவை , கஜுராஹோவிலிருந்து கிளம்பிய போது ஓர்ச்சா வரும் எண்ணம் இல்லை..கொரியன் ஒருவர் உடன் பயணித்தார்.. அவர் தான் ஓர்ச்சா பற்றி கூறினார்.. மத்தியப்பிரதேசத்தில் உள்ளது ஓர்ச்சா ..கிட்டத்தட்ட எழுநூறு வருடங்களுக்கு முன் குளியல் அறை கழிப்பறை என்று திட்டமிட்டு கட்டப்பட்ட பல அடுக்குகள் கொண்ட அரண்மனை (planned multi storied palace)..    ஓர்ச்சாவில் கோட்டையும் கோவிலும் அரண்மனையும் இருந்தது.. பெரிய கடாயில் காய்ச்சிய பால் இரவும் கிடைக்கும்..சற்றே அமைதியான ஊர்.. கஜுராஹோவிலிருந்து இரயில் வண்டி சிறிதே மெதுவாக நகர்ந்த போது இறங்கிகொண்டோம்..

காசியில் கிருஷ்ணமூர்த்தி (ராஜ்காட்)
பவுணடேஷனின், உலகளாவிய கூடுகைக்கு சென்றபோதுதான் கஜுராஹோ, ஓர்ச்சா, ஜான்சி க்கு பயணித்தது..

ராஜ்காட் க்ரிஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் பல ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது... வனத்தின் உள்ளே நடை பாதையில் நரிகள் எந்த இடையுரும் இன்றி நடமாடிக்கொண்டிருக்கும்... முகேஷ் குப்தா அந்த இன்ஸ்டிடியூடில் தான் இருக்கிறார்.. சிரித்த முகத்துடன் சிரிக்க சிரிக்க பேசும் அவரை மிகவும் பிடித்தது.. அப்படி ஒரு தோழமை...என்னை இஸ்ரேல் க்கு போக சொன்னார்.. அங்கே ஒரு commune இருப்பதாகவும் அந்த life style எனக்கு பிடிக்கும் என்றும் சொன்னார்...எல்லாவற்றையும் கேட்டுவிடுகிறதா மனது...

காசியின் நெருக்கடியான சந்துகளில் கடாயில் பால் காய்ச்சப் படுகிறது... மணிகர்ணிகாவில்   ஒன்றன் பின் ஒன்றாக இறந்த உடல்கள்  சிதையில் இடப்படுவதை கண்ணுற்ற இரவு தூக்கம் தொலைந்தது.. கங்கா ஆரத்தி ஒருபுறம் ....உடல் முழுக்க திருநீறு பூசிய நிர்வாண சாமியார்கள் .மிக மலிவு விலையில் நடையோர ஓவியங்கள் , சந்து சந்தாக நுழைந்து துப்பாக்கி ஏந்திய காவலர்களுக்கு மத்தியில் நடந்து காசி விசுவநாதரை வணங்குவது என்று காசி ஒரு வித்தியாசமான அனுபவம் தான்....ஆ அந்த படகில் போனோமே கங்கையில்...அந்த பாங் எனும் பணத்தை ருசிக்காமல் வந்தது இன்றளவும் வருத்தம் தான்...

இந்த கோரானா சமயத்தில் எவ்வாறு இருக்கும் காசி...

இந்தியாவில் எனக்கு பாண்டிச்சேரிக்கும் மணாலிக்கும் , ஹிமாச்சல்  பிரதேசத்திற்கும்,  ஸ்ரீ நகர் கும்,  ஹம்பிக்கும் கோகர்ணா விற்கும் இணையாக பிடித்த ஊர் கஜுராஹோ.....

ஊரே மோனத்தில் ஆழ்ந்து கிடக்கும்.... மக்கள் துயில் எழும்புவதே 7.00 க்கு மேல் தான் எந்த பரபரப்பும் இல்லாமல் அனாயாச பொறுமையுடன் இயங்கும் ஊர்...தெருக்கள் மிகவும் சுத்தமாக இருக்கும்...cycle வாடகைக்கு எடுத்துக் கொண்டு சுற்றினோம்... ஆம் காலையில்  ஊர் நடுவில் பெரிய குளத்தை பார்த்த படிக்கு ஒரு டீ கடை இருந்தது.. தினமும் அவர் நிதானமாக போடும்இஞ்சி டீ யில் தொடங்கும் நாள், இரவு ஒரு சிறிய மைதானத்தில்  கூடும் நடை வண்டி உணவகங்களில் முடியும்...ஒரே ஒரு wine shop இருந்தது... குட்கா போட்டு நிறைவடைந்து விடுவார்கள் போல...

ஒரு பழம் பொருட்கள் விற்கும் தனியார் கடை யில் மிகவும் வித்தியாசமான அழகான கைவினை பொருட்கள் கிடைத்தன...

அரசு தினமும் நடத்தும் நாட்டுப்புற நடன நிகழ்வு ஒன்று உண்டு..உண்மையின் உண்மையில் அவ்வளவு அற்புத நடனங்கள்..
கஜுராஹோ வின் light show மிகவும் பிடித்தது...

அழகான சிற்பங்கள்..அழகான ஊர்...



No comments:

Post a Comment