Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Monday, July 27, 2020

                        Dancing of Birds ---- 3




 தன்னிச்சையாக சில கதவுகள் தாழிட்டு கொள்ளும் அப்படி நாவும் சிலசமயம் தன்னுள் அடங்கிக்கொள்கிறது..நா மூடிக்கொண்டால் மட்டும் மனம் அடங்கிவிடுகிறதா..அப்பொழுதான்  மனம்  அதிகம் பேசுகிறது...

தொட்டான்சிணுங்கி  செடியை (touchme not) பார்க்கும் பொழுதெல்லாம் அதை சீண்டிப்பார்பதுண்டு...நாம் தொட்டவுடன் இலையை மூடிக்கொள்ளும் நம்மிடம் கோபித்துக்கொள்வது மாதிரி ..என்ன மாதிரியான அற்புதம்அது, கண்முன்னே          உணர்வால்  தன்னை உணர்த்தும் உயிர்...

எதேச்சையாக தோழி ஒருவர் நீயா நானா நிகழ்வின் ஒரு பகுதியை காண்பித்தார் அதில் ஒரு பெண், தான் திருமணத்திற்கு  தன் தாய் வீட்டில் 50 சவரன் நகையும் 50 புடவையும் 50 செட் சுடிதாரும் கேட்டார்.. இன்னொரு பெண் தனக்கு தாங்கள் குடியிருக்கும் வீடும் அதற்கு சற்றே தொலைவில் உள்ள இடமும் தனக்கு பெற்றோர் கொடுக்க வேண்டும் எனவும்  365 புடவையும் 365 சுடிதாரும் கேட்டார்..நிகழ்வை நடத்தும் கோபிநாத் ஏன் அந்த வீடு எனகேட்ட தற்கு அதில் தான் வாடகை வருகிறது தான் வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்கலாம் என்றும் மேலும் ஒரு முறை போட்ட துணியை அந்த வருடத்தில் திரும்பவும் அணியக்கூடாது என்று தான் விரும்புவதாகவும் சொன்னார்..
உடன் camera இந்த பெண்களை பெற்ற அம்மாக்களை focus செய்கிறது.. அவர்கள் பெருமிதத்தோடு தங்கள் பெண்களை பார்க்கிறார்கள்..

தன் உரிமைகளை ஒரு பெண் கேட்பதை பற்றி இதில் கேள்வி எதுவும் எழவில்லை எனக்கு...ஒருவர் தன்னை உணர்தலும் தன்னை உணர்த்தலும் இவ்வாறா என்று கேள்வி எழுகிறது..

பரஸ்பரம் இருவர் விரும்புகின்றனர்.. பெண் தன் வீட்டில் கூற அவர்களும் பெண்ணின் விருப்பத்தை  மதித்து பிள்ளை வீட்டில் பேச அவர்கள் சாதி எல்லாம் தங்களுக்கு இணையானது தான் என்று விசாரித்துக்கொண்டு பின் எவ்வளவு பவுன் நகை போடுவீங்க என்றும் மாப்பிள்ளைக்கு இரண்டு பவுனில் செயின் மற்றும் திருமண செலவு முழுதும் பெண்வீட்டார் ஏற்று நடத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.. நன்றாக படித்து மிகவும் அழகாக இருக்கும் அந்த பெண்  நல்ல வேலையில் உள்ள அந்த பெண்ணின் வீட்டாருக்கு சற்று அதிர்ச்சியாக இருந்திருக்கிறது  பையனிடம்  பேசி பார்த்தபோது பெண் வேலைக்கு போக வேண்டுமா போகக் கூடாதா என்று அவரே முடிவு எடுப்பார் என்றும் தான் திருமணம் செய்து கொள்வதே தன் தாயை பார்த்துக் கொள்வதற்குத்தான் என்றும் கூறியுள்ளார்...

கொஞ்சம் சுதாரித்துக்கொண்ட பெண்ணின் பெற்றோர் இது செய்வது பெரிய விஷயம் இல்லை ஆனால் காதல் எனும் வார்த்தைக்கு நீங்கள் புரிந்து கொண்டது என்ன,  பரஸ்பர புரிதல் விட்டுக்கொடுப்பதும் இயல்பாக வரனும் அவர்கள் அம்மாவிற்க்கு மட்டுமே என்றால் உன் சுயம் எங்கு மதிக்கப்படும் என்றும் கேட்டுள்ளார்கள்..

Pre KG LKG UKG  மூன்று வருடங்கள் பள்ளி 12 வருடம் கல்லூரி 4 வருடம் கிட்டத்தட்ட 19 வருடங்கள் படிப்பு வாழ்வை பற்றிய எவ்வித பிம்பத்தை மனிதர்களிடம் உருவாக்குகிறது...

எல்லாமே வியாபாரம் பொருளாதாரம் தானா.. இப்படியான சிந்தனையில் ஒன்றாய் வாழ ஆரம்பித்தால் 50 வருட தாம்பத்தியத் தை வாழ்வது தான் எங்கனம்...

வாழ்வை, நிதர்சனத்தை தொலைத்து விட்டு வாழ்வின் சாயலில் ஏதோ ஒன்றில் வாழும்போது , நினைவில் கொள்ள வேண்டியது செயற்கை மலர்கள் மனம் தருவதில்லை  என்பதுதான்...

No comments:

Post a Comment