Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Monday, October 2, 2017

          கொஞ்சம் மெதுவாய் வாழ்வோம்....

     என்றேனும் தினைப்பணியாரமும் ( தேங்காய் சட்னியுடன்),cucumber cane juiceஉடன்சாப்பிட்டிருக்கிறீர்களா?.ஓர்வன்மம் அற்ற மாலையில் சற்றே மழை தூவிவிடும்நேரத்திற்கு முன்பாய் சாப்பிட்டுக் கொண்டிருக்க சிவக்குமார் சார் ஞாபகம் வந்தது,தொண்டாமுத்தூர் road ல்,  bharathiya vidiya bhavan school Road ல தான் அவர் வீடு..

காஷ்மீர் பூர்வீகம்,  Hindhi,  sanskrit,  Thamizh,  English  எழுதவும் படிக்கவும் தெரியும்...Jittu Krishnamoorthy யின் philosophy யில் ஈர்க்கப்பட்டவர், happy Bachelor..  கிட்டத்தட்ட 80வயது, LKG  ல இருந்து +2 வரை tuition எடுக்கிறார்...
இன்றைய பொழுது முழுமைக்கும் அவரிடம் பேச அத்துனை விஷயமிருக்கும்...

இரண்டு நாள் முன்பு பேசிக் கொண்டு (Phone la)  இருந்தபோது எப்ப வேணா வாங்களேன் என்றார்.. ஓரு பணியாரம் parcel வாங்கிக் கொண்டு புறப்பட்டேன்,  மலரரையும் கூட்டிக் கொண்டு சென்றேன் தூவானம் போல் தூவிக் கொண்டிருந்த வானம் வலுத்துக்கொட்ட ஆரம்பித்தது.. ஓரு யூகத்தில பாதையை அனுமானிக்க வேண்டி இருந்தது...அவர் வீட்டை அடைந்த போது வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்,  **********வரலியா எனும் கேள்வியுடன் எனை எதிர்கொண்டார்..

செந்தமிழன் அவர்களின் புத்தகம் சிலவற்றை கொடுத்தேன், எதுவானாலும் படிக்கலாம் என்று வாங்கிக் கொண்டார்.. இன்றைய கல்விச் சூழல், குழந்தைகள் மீதான பெற்றவர்களின் ஆதிக்கம், சூழலியல், தனிமனித சுதந்திரம், relationship எல்லாவற்றையும் ஓர் ஆழ்ந்த புதிய நோக்குடன் சிந்திக்கக் கூடியவர்,

இம்மாதிரியான மனிதர்கள் தான் உண்மையான நாகரீக வளர்ச்சிக்கும் உயர்ந்த சிந்தனைக்கும் விதையாய் இருந்தவர்கள்,  அவரவர் களின் உணவு ஆரோக்கியத்தை பேணமுடியா அவசர உலகத்தில்,  இவர் போன்றோரின் இருப்பு கண்டு கொள்ள யாருக்கும் நேரமிருக்காது, நல்ல சில மாற்றுச்சிந்தனைகளே மனித சமுதாயம் மேம்பட உதவும்..

வெளியே வந்து வண்டி எடுத்தபோது தொப்பலாய் நினைத்திருந்தேன்,  மழை வலுத்திருந்தது,  மனம் சிறகைவிரித்தும் சிறகுபோலாயுமாயிருந்தது...

No comments:

Post a Comment