Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Thursday, May 21, 2015

மீட்டெடுத்தலெனும் முயற்சி...

Its Hard to Wait Around For Something 
U Know Might Never Happen, 
But Its Even Hurts To give up When You Think Its 
Everything You Want"

பறவையும்------நான் அப்பதான் அந்த கூட்டை பாத்தேன். ventilator ல அந்த சின்ன இடுக்குல கட்டிருந்துச்சு, எல்லாம் மறந்து போயி ஒரு சந்தோசம் மனசுக்குள்ள.. பறவையின் கூடு எப்பவுமே ஒரு சந்தோசந் தான், பிரமிப்புதான் ..ஒருதடவ மூக்கனூர் போயிருந்தோம், அங்க ஒரு கிணத்துக்குள்ள பரவியிருந்த மரத்தில நடுக்கிளையில safe ஆ கட்டியிருந்துச்சு,  தூக்கனாங்குருவி அதோட கூட்டை..தூக்கனாக்குருவிகூடு ரொம்ப அழகு, அதோட் Pair ர கூட்டிவந்து காமிச்சு ஒகே வாங்கின்னு, ஆண் குருவியின் மெனக்கெடல் அதிகம்..

மனசும்---------மனசு ஒரு குரங்கு மாதிரி இல்லாம, ஒன்பது குரங்காய் ஆட்டம் போடுது, மூளை எவ்வளவு சமிக்‌ஷை கொடுத்தாலும், இதுக்கு புரியறதே இல்ல..சில சமயம் துக்கமா இருக்கிறத வெளிக்காட்டிக்காம இருக்க சந்தோசமா இருக்கிறமாதிரி நடந்துக்க வேண்டிருக்கு.. அப்பெல்லாம் ஒரு வலி இருந்திட்டே இருக்கும் நெஞ்சுக்குள்ளே..

பறவையும் --------- ரொம்ப நாள் அந்த room திறக்கல,  disturb இல்லாம கூடு கட்டிருக்கும்.. சத்தமில்லாம room சாத்திட்டு வந்திட்டேன்.. ஒரு பறவையின் கூடுபோலொரு வீடு, அதனைப் போலொரு வாழ்வு,  எப்பவுமே ஒரு ஆதர்ஷ கனவு ..

மனசும்----------நினைவுகளில் இருந்து விடுபட்டிருந்த மனசு திரும்பவும் குரங்கு மாதிரி தாவி உக்காந்துச்சு,room பெருக்கி சுத்தம் பண்ற மாதிரி, செய்ய முடிஞ்சா நல்லாருக்கும்.. கொஞ்ச நாளா இது தான் வேலையே, மனச பாக்கிறது. பாத்து பாத்து அத ஒன்னும் இல்லாம பண்ணிட்றது.try செய்ய , அது அவ்வளவு easy இல்லேன்னு தெரிஞ்சது, அப்பிடி முடியும்னும் தோணல..  

பறவையும்--------கொஞ்ச மாசம் முன்ன என் sis வீட்டு portico வுக்கு ஒரு அழகான sunbird வரும், டான்னு 7 மணி  (evening) க்கு, தூங்கறதுக்குன்னே வரும், அப்புறம் வீடே silent ஆகிடும் அதை disturb பண்ணக்கூடாதுன்னு...போன வாரம் தோட்ட வேலை செய்ய  "Money Plant "   இடைல ஒரு சின்ன கூடு, இன்னும் சரிவர கட்டி முடிக்கப்படாம,  தேன் சிட்டு காலைல வந்து கத்திட்டுக்கிறது இதுக்குத்தான்னு நினைக்கிறேன்..இப்போ  Money Plant தூக்கி மேல விட்ருக்கேன்.. எதிர் வரும் அழகான பொழுதுகளுக்காக waiting...

 
மனசும்--------- எல்லா நாளின் பொழுதுகளும் ஒரே மாதிரி இருக்கிறதில்லே,நல்லதோ கெட்டதோ சரியா பாக்கிறமனசு அமைஞ்சுட்டா, இதுவும் கடந்து போகும்னு சாதாரணமா கடக்க முடிஞ்சிட்டா... இல்ல அப்பிடி.. இல்ல,, life is  complicated becoz we are complicated.. Life is not Complicated, becoz we are not.. 

பறவையும்-------அன்னிக்கு சுவாதியும், நீத்துவும் office வந்திருந்தாங்க, Lunch  box வைக்கன்னு அந்த கதவ திறக்கப் போக, திறக்காதே ன்னு, நான் பதற என்ன அங்க புதையல் எதாவது வச்சிருக்கியான்னு, கிண்டல் பண்ணிட்டிருந்தாங்க, நானே மெதுவா கதவை தெறந்து உள் ள போக, அதோ அந்த சின்ன உருவம், கண் இடுங்கி பார்த்தச்சு. அதுல எந்த பதட்டமுமில்ல, நிதானமான பார்வை அது,,அதுதான் எங்க சினேகத்துக்கான முதல் விதை...



2 comments: