Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Friday, October 11, 2013

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”

பூஜ்யம் மட்டுமே  நிறைவுள்ளதாகப் படுகிறது..மற்ற எண்கள்,அப்படி தோன்றவில்லை..,நிறைவற்றதாக உள்ளது, அதனதன் உருவத்தில்...ஒன்றுமே இல்லாத ஆனால் ஒரு முழுமை பூஜ்யத்தில், உள்ளது...



ஒரே head phone ன  ஆளுக்கு ஒரு காதில,மாட்டிட்டு நடந்திட்டிருந்தோம்  நானும் சுகியும்.. அந்த morning time ல அப்படி நடக்கிறது,நல்லா இருந்துச்சு...மாறி மாறி ஏதேதோ பாட்டு...சுமார் 1.30 மணிநேரம் நடந்திருப்போம்...ஏய் இது supper ரா இருக்குன்னு ஒரு பூவ காமிச்சா, ரொம்ப அழகா இருந்த அந்தப்பூவோட பேரு நிஷாகந்தி..so இன்னிக்கு பொழுது நல்லா இருக்கப்போவுது...பரபரன்னு இல்லாம ஒரு பூ, செடி,மரம்.. சந்தோஷமா விளையாடிட்டு இருக்கிற மக்கள், ன்னு நிதானம்மா நகர்ந்த அந்த காலை நேரம் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்துச்சு...

breakfast ஒரு standing hotel ல, சிரியா மேல போர்தொடுக்க அமெரிக்கா ஏன் ரொம்ப ஆவலா இருக்குன்னு ஆரம்பிச்சு, இந்திய ருபாயின் மதிப்பு ஏன் அதலபாதாளத்தில போகுதுங்கிறவரைக்கும்...ஒரு மினி tffin  (mini idlies, one smaal masaal dosaa, konjam pongal, kesari and vadaicomplete செய்யிற வரை பேசிமுடிச்சோம்...

வீட்டுக்கு வந்தோன அளவுக்கு மீறின tired ல, மதியத்துக்கு மீன் குழம்புவோம் ன்னு சொன்னதமறந்து தூங்கிட்டேன்...afternoon  முட்டை குழம்பு ரசத்துடன்( சுகி வைக்கும்  ரசம் அவ்வளவு super) ஒரு பிடிபிடித்துவிட்டு நாங்கள் “valley School" க்கு கிளம்பும் போது சுமார் 3.30 இருக்கும்...

பல ஏக்கர் நிலப்பரப்பில இல்ல,இல்ல அது ஒரு சின்ன forest லஅமைஞ்சிருந்துச்சு ... அந்த school...பெரிய வகுப்புங்க எதுவும் கண்ணுக்குப்படல.. மாறாஎல்லாமே open yard ல் திறந்த வெளியில இயற்கையோடு ஒன்றி இருந்துச்சு...இது ஜே.கே யின் philosophy follow பண்றவங்களால நடத்தப்பட்ற school..



concrete இல்லாம, plastering இல்லாம இருந்த அந்த buildings எல்லாமே ஒரு கலை வடிவோட நேர்த்தியா இருந்துச்சு... natural stones யும், மண்ணிலயும் நெறைய architectural works, பாத்தோம்...சின்ன குளம் மாதிரியான ஒரு இடத்தில, செம்மண் கலந்த தண்ணி நடுவுள ஒரு மரம், பார்க்கிறதுக்கு, painting மாதிரி இருந்துச்சு..செம்மண் கலந்த அந்த தண்ணி அவ்வளவு அழகு...

திரும்பி வர்றப்போ நளினிம்மாவ பார்தோம், அவங்க அங்க இருக்காங்க, எப்போ கிளம்பி வந்திங்க, இவ்வளவு நேரம் ஆச்சா, மேல பழம் இருக்கு எடுத்துக்கோங்கன்னு.. அன்பா உபசரிச்சாங்க...kind words cost nothing but it can make wonders...




நாங்க மறுபடியும் ஒரு round  போயிட்டு , amphi  theater க்கு மேல இருந்த பர்ணசாலைக்கு வந்தோம், சுற்றி ஏத்தியிருந்த அகல் விளக்கு அந்த அந்தி நேரம், சின்னதா போட்டிருந்த கோலம்ன்னு, அவ்வளவு ரம்யமா இருந்துச்சு அந்த இடம்...கீழபோட்டிருந்த பாய்ல உக்காந்திருக்க,சரியா 6.30 மணிக்கு ஆ..ஆஆ...ஆஆஆ...ஆ...ஆஆ...ஆஆஆ என்ற குரலோச கேக்க ஆரம்பிச்சது..(சிவரஞ்சனி ராகம் ன்னு சொன்னாங்க) அந்த நிமிஷமே எனக்குள்ளே ஏதோ புரள ஆரம்பிக்க.. கிட்டத்தட்ட , எல்லா(ம்) மறந்து  அந்தநிகழ்வுக்குள்ள போக ஆரம்பிச்சேன்..

அது “திரு.ரவீந்திரநாத் தாகூர் எழுதிய “சுபா” ங்கிற சிறுகதைய inspiration ஆ வச்சிட்டு,  வீணாபசவராஜைய்யா ங்கிறவங்க direct செஞ்சிருந்த ”மூக்கீ”ங்கிற theater dance piece ...மூக்கீன்னா கன்னடால “ஊமை”ன்னு அர்த்தம்...அஞ்சு பேர் அதுக்கு உயிர் கொடுத்திருந்தாங்க ..Poornima, Abhisheka, RaviShankar,Vinay and Akhshay....





ஒரு வேள்விக்கு முன்ன உக்கார்ந்திருக்கிற மாதிரி இருந்துச்சு...கொஞ்சநேரத்திலேயே அந்த வேள்வில இருந்து நிறையவிஷயங்க வர ஆரம்பிச்சது.. அவங்களோட அசாத்தியமான அபிநயங்களால உள்ளுணர்வுகள வெளிகொண்டாந்திருந்தாங்க...


தலைல ஒரு தட்டும், அதுல ஏதோ ஒரு பொருளையும் வச்சு கொண்டாந்தாங்க..ஒரு தட்டுல “parachute" எண்ணெய் டப்பாவும், இன்னொன்னுல கற்பூரவள்ளி செடியும் இருந்துச்சு.. எல்லாருமே ஒரேமாதிரிதா dress போட்டிருந்தாங்க...





வசனம்னு பாத்தா,அவங்க எல்லாருமே சொன்ன ஒரே dialogue,

”எனக்கு பேசத் தெரியாது எனக்கு பேசவராது...அதுனால ஜனங்க நினைக்கிறாங்க எனக்கு உணர்வுகள் இல்லைன்னு”
கன்னடா, ஹிந்தி, தமிழ்  னு மாறி, மாறி வேறவேற movements ல இதைமட்டும் தான் வசனமா சொன்னாங்க...

ஆனா அதோட பொருள் தான் என்ன,
 வார்தைகளால, பகிரங்கமா  சொல்லமுடியாத எதையும் நாம உணர்வுகள் இருக்கிறதா மதிக்கிறதோ, நினைகிறதோ இல்ல, அப்பிடி ஒத்துக்கவும் முடியறதில்ல நம்மாள..

ஒரு பெண்ணை வெறும் அழகுப்பொருளா பார்கிறசமூகம் அவங்களுக்குன்னு இருக்கிற உணர்வுகளுக்கு எண்ணங்களுக்கு சரியான மரியாதை தர்றதில்ல..பாலியல் வன்முறை நடந்தா,  ஒரு பெண்  போட்ற dress அவ வெளில போறவர்ற time வரைக்கும் அதுக்கு காரணம் சொல்றோம்.

இயற்கைய எவ்வளவு உதாசீனப்படுத்த முடியுமோ அவ்வளவும் பண்றோம்..plastic use பண்றதுல ஆரம்பிச்சு, மரத்த கண்ணாபின்னானு வெட்றது நீர் நிலைகளை நாசம் பண்றது..etc etc எல்லாமே...

ஒருத்தர் சொன்னார் “ஆமா நான் “gay" அதுனால என்னனு”, ஆமா அதுனால மத்தவங்களுக்கு என்ன, என் உடை என் விஷயம் எல்லாமே என் செளகர்யங்கள்... the things most people want to know about are usually none of their business...
ஆனா அப்பிடி இருக்கிறதில்லை..



இந்த drama முடிவுல பேசறப்போ ஒவ்வொருதரும் “மூக்கி” கூட தன்னை இணைச்சுகிட்டத ஆத்மார்த்தமா பகிந்துகிட்டாங்க...

abhisheka சொல்றப்போ “சின்னவயசுல மரம், செடி கொடிகூட close சா இருந்த அளவுல என்னால மனுஷங்க கூட இருக்கமுடிஞ்சதில்ல” ன்னு,நானும் இத உணர்ந்திருக்கேன்...

 Ravishankar தான் திக்கி பேசறத சங்கடமா சொல்ல, வீணா அதுவும் ஒரு ரிதம் தான், கேக்கறதுக்கு பொறுமை இல்லாத நாம தான் feel பண்ணனும்னு.. சொன்னது உண்மை தான்...

Akshay சொல்றப்போ “என்னோட அம்மாவுக்கு dance ன்னா ரொம்ப இஷ்டம் அவங்க ஒரு classical dancer, marriage க்கு அப்புறம் அத continue பண்ணமுடியல, அந்த interest ல தான் நான் கத்துக்க வந்தேன்” ன்னும் சொன்னார்...

 பூர்ணிமா தவிர யாருமே professionals கிடையாது... இவங்கள அருமையா ஒருங்கினைச்ச “ வீணா” வை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...she is just great...

ஒரு பறவையோ,விலங்கோ,மரமோ, மனுசனோ, இயற்கையோ எதுவாயினும், எதிர்க்க இயலாதவைகளை (எளியவைகளை) உதாசீனப்படுத்தி, காரியங்கள் நடந்துட்டுதானிருக்கு....எத்தனையோ சந்தர்ப்பங்கள் “மூக்கி” யாக்கி வேடிக்கை பார்த்திட்டு இருக்குங்கறத, உணர்ந்தப்ப அடக்கமுடியாத அழுகை வந்துச்சு...ஆமா நானும்  பல சந்தர்ப்பங்களில் என்னுணர்வுகளை வெளிப்படுத்த முடியா “மூக்கி”....







No comments:

Post a Comment