Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Sunday, April 10, 2011

என் அகராதி

எனக்குள் இருக்கும் நான் கேட்டது 
நீ "பூமி"  தானே ...
இல்லை
"நிலா" தானே நான் கொஞ்சியது  
இல்லவே இல்லை..
பின் நீ யார்???
"சூரியன்"
என்ன ???
நான் ஆச்சர்யப்பட்டது  
பட்சிகளின் இசைகேட்டு   
கண்விழிக்கும் 
அதிகாலை  பொழுதுகளில் 
கதிரவனாய்..


இல்லத்து  அரசியாய்
காலை  பரபரப்பில்  
கடமையாற்றி 
பகலவனாய்  
பணிபுரிய 
புறப்படுகிறேன் ..
கொடுமைகளை காணும்போது
சுட்டெரிக்கும்  சூரியனாய் 
தகிக்கும் நெஞ்சம்

மழலையிடம்,நல்இசையிடம்
இயற்கையிடம் 
மயங்கும் மனம் 
மாலை  நேரத்து 
இளங்கதிராய் 
அறிவுப்பசிகொண்டு 
ஊடுருவும் 
கதிர்களோ  எல்லைகளை 
தாண்டி போய்கொண்டே இருக்கிறது

நான் நினைக்கும் இடம் செல்லவும் 
என்னை  நெருங்கவொட்டாமல்
செய்யவும்  என்னால் முடியும் 
ஒ  ஒ ..


எனக்கான  ஓய்வாய்
இரவின்  மடியில் 
உறங்கிப்போகிறேன்...
மீண்டும்  புதிதாய்  
இன்னும் ஒரு ஜனனம் 
எல்லைகளிலா கதிர்களை பரப்பி 
ஒவ்வொரு நாளும் 
இனிமையாய்...











No comments:

Post a Comment